ஒரு நிறுவனத்தில் அல்லது அலுவலகத்தில் பணியில் இருக்கும் பொழுது பிரச்சனைகள் என்பது எழத்தான் செய்யும், கீழே கூறியுள்ள காரணத்தால் பிரச்சனை எழுந்தால், அப்பொழுது வேலையில் இருந்து வெளியேறலாம்.
1. அதிகப்படியான தகுதி
2. நான்தான் என்னும் உயரதிகாரிகள்
3. நேர்மையற்ற பணி
4. உடல் நலத்தை பாதிக்கும் பணி
5. வாய்ப்புகள் இல்லாத நிறுவனம் அல்லது அலுவலகம்
அதிகப்படியான தகுதி
முதுகலைப் பட்டம் பெற்ற ஒருவர் பத்தாம் வகுப்பு படித்தவர் செய்யும் வேலையை செய்தால், அவர் புதிதாக எதையும் கற்றுக் கொண்டு அடுத்த நிலைக்கு முன்னேற முடியாது இதனால் அவர் கற்ற முதுகலைப் பட்டமும் அதற்கான செலவு செய்த நேரம், பணம் ஆகிய அனைத்தும் வீண். இதனால் அவருக்கு வேலை மீதான திருப்தி இருக்காது அதனால் அப்பணியில் இருந்து வெளியேறலாம்.
நான்தான் என்னும் உயரதிகாரிகள்
சில நிறுவனம் அல்லது அலுவலகத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் நான் நான் நான் என்னும் மனநிலையைக் கொண்டிருப்பார்கள். இவர்கள் கீழ் பணிபுரிவது என்பது மிகவும் சவாலான காரியமாக இருக்கும். இவர்களிடமிருந்து நாம் எந்த ஒரு நல்ல செயலையும் கற்றுக்கொள்ள முடியாது. இவர்களிடம் பழகுவதால் நான்தான் என்னும் எதிர்மறை எண்ணம் நமக்குள்ளும் ஏற்படும் இது நம் நேர்மறை எண்ணத்திற்கு எதிரானது.
நேர்மையற்ற பணி
விற்பனைத் துறையில் வேலை செய்யும் ஒருவர் தனது நிறுவனத்தின் பொருள்களின் தரம் குறித்து மிகவும் உயர்வாக கூறி வாடிக்கையாளர்களை வாங்க வைக்க வேண்டும், இவ்வாறு வேலை செய்யும் பொழுது உண்மையில் அந்தப் பொருள் தரமானதாக இருந்தால் மகிழ்ச்சி. மாறாக தரமற்ற ஒரு பொருளை விற்பனை செய்தால் அது தவறு.
நம்பி வரும் வாடிக்கையாளர்களுக்கு உண்மையாக இருக்க முடியவில்லை என்றால் நாம் அப்பணியில் இருப்பது என்பது நமக்கு நாமே குழி தோண்டும் செயலாகும். எனவே நம் உண்மைக்கும் மனசாட்சிக்கும் புறம்பான செயல்களில் ஈடுபடாமல் இருக்க அப்பணியில் இருந்து தாராளமாக வெளியிடலாம்.
உடல் நலத்தை பாதிக்கும் பணி
உடலுக்கும் மனதிற்கும் ஆரோக்கியமற்ற பணியில் இருந்தார் அதிலிருந்து வெளியேறலாம். நாள்முழுவதும் கணினியின் முன்பு அமர்ந்து வேலை செய்தல். ஷிப்டு முறையில் இரவு பணிக்கு செல்லுதல். இவற்றை நீண்ட காலத்திற்கு செய்தால் அது நிச்சயம் உடல் நலத்தை பாதிக்கும் அதனால் வேறு பணியில் சேர்ந்து கொள்ளலாம்.
வாய்ப்புகள் இல்லாத நிறுவனம் அல்லது அலுவலகம்
வாய்ப்புக்கள் என்பது ஒவ்வொருவருக்கும் மிகவும் அவசியமானது வாய்ப்புகள் இருந்தால் தான் நம் திறமையை மற்றவர்களுக்கும் நிரூபிக்க முடியும் அவ்வாறு நிரூபித்தால் நான் நாம் பணி உயர்வு மற்றும் நம் மதிப்பு உயரும். நம் திறமையை நிரூபிப்பதற்கான சந்தர்ப்பமும் சூழ்நிலையும் இல்லாத நிறுவனம் அல்லது அலுவலகம். நம்மளுடைய தனிப்பட்ட தனித்திறனை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பில்லாத நிறுவனம் அல்லது அலுவலகம் இவற்றிலிருந்து வெளியேறலாம்.
மேலே கூறியுள்ள காரணங்களில் ஏதேனும் இரண்டு அல்லது மூன்று நீங்கள் பணிபுரியும் சூழ்நிலையில் ஒத்துப்போனால் தாராளமாக நீங்கள் செய்யும் பணியில் இருந்து வெளியேறி வேறு பணியில் சேரலாம்.
போனஸ் டிப்ஸ்
• பணியில் இருந்து வெளியேறும் முன்பு நம் தகுதி/ திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
• நமக்கான தகுதியான வேலை கிடைக்கும் என்ற நேர்மறையான எண்ணத்துடன் இருத்தல் வேண்டும்.
• ஒரு நல்ல பணி கிடைக்கும்வரை அதற்காக காத்திருக்கும் பொறுமை அவசியம்.
உங்கள் தகுதிக்கும் திறமைக்கும் தகுந்த நல்ல வேலை கிடைக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.