இன்றைய Facebook, Twitter, Whatsapp இளைஞர்கள் மறந்து வரும் முக்கிய விஷயம் முதலீடு. அவர்களுக்கு சம்பளத்திற்கு ஏடிஎம் கார்டு கொடுக்கும் போது முன்பணம் ஏதும் இல்லாமல் செலவு செய்ய கிரெடிட் கார்டை பல வங்கிகள் இன்றைக்கு கொடுத்து வருகின்றன.
ஆரம்பத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகம் சம்பளம் வாங்குகிறார்களோ அந்த அளவிற்கு அவர்கள் வேலையில் இருந்து விரைவில் விடை பெற்று விடுகிறார்கள். அவர்கள் பணி ஓய்வு காலத்தை இனிமையாக கழிக்க வேண்டும் என்றால் இளமையில் முதலீட்டை ஆரம்பிப்பது மிக முக்கியம்.
சுரேஷ், சக்தி இருவரும் நண்பர்கள் படிப்பு முடித்தவுடன் 22 வயதில் இருவருக்கும் ஒரே நிறுவனத்தின் வேறு வேறு கிளைகளில் கை நிறைய சம்பளத்தில் வேலை கிடைத்தது. சுரேஷ் சம்பளத்தை வாங்கி ஜாலியாக செலவு செய்தான். இதனால் அவன் வருமான வரியும் அதிகமாக கட்ட வேண்டியிருந்தது. சக்தி சிக்கனமாக இருந்து சம்பளத்தில் பெரும் தொகையை முதலீடு செய்தான் மேலும் வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்கினான். இதனால் வருமான வரி கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படவில்லை.
நண்பர்கள் இருவருக்கும் வேலைக்கு சேர்ந்த ஐந்தாவது வருடத்தில் திருமணம் ஆனது. இருவரின் மனைவியரின் குணமும் அவர்களின் கணவர்களின் குணம் போலவே அமைந்தது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்கள் இருவரும் சந்தித்தனர் அப்போது சுரேஷ் தம்பதிகள் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி எதிர்காலத்திற்காக சேமித்துக் கொண்டிருந்தார்கள். சக்தி தம்பதிகள் எதிர்காலத்துக்கு தேவையானதை இப்பொழுது சேமித்து விட்டதால் ஜாலியாக சுற்றுலா என சென்று கொண்டிருந்தார்கள்.
இளமையில் முதலீடு என்பது நம் பணத்தை பல மடங்கு பெருக்கும் ஆற்றல் கொண்டது. இதனை தமிழில் கூட்டு வளர்ச்சி ஆங்கிலத்தில் பவர் ஆஃப் காம்பவுண்டிங் என்பார்கள் இதை உலகின் எட்டாவது அதிசயம் என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னார்.
பவர் ஆஃப் காம்பவுண்டிங் வலிமையை உணர்ந்த அந்தக் காலம் முதல் சொல்லப்பட்டு வரும் சம்பவத்தை பார்ப்போம்.
முன்னொரு காலத்தில் சதுரங்க விளையாட்டை கண்டுபிடித்த கிராண்ட் விஷஸ் சீசா அதை ஒரு இந்திய மன்னனிடம் விளையாடி காண்பித்தார். மன்னருக்கு இந்த செஸ் விளையாட்டு மிகவும் பிடித்து விட்டது என்ன பரிசு வேண்டும் எனக் கேட்டார்.
அதற்கு செஸ்ஸை கண்டுபிடித்தவர் சதுரங்க அட்டையில் இருக்கும் 64 கட்டங்களுக்கும் நெல் கொடுங்கள் என்று கூறி நெல்லை எந்த கணக்கில் எப்படி கொடுக்க வேண்டும் என்று விளக்கிக் கூறினார்.
அதாவது முதல் கட்டத்திற்கு ஒரு நெல் இரண்டாவது கட்டத்திற்கு இரண்டு மூன்றாவது கட்டத்திற்கு 4 நான்காவது கட்டத்திற்கு 8 என்ற கணக்கில் கேட்டார் இவ்வளவுதானா என்று சிரித்தார். மன்னர் சில தினங்கள் கழித்து சதுரங்கத்தின் 64 ஆம் பட்டத்தை எட்டும் போது 18 மில்லியன் ட்ரில்லியன்( ட்ரில்லியன் என்பது லட்சம் கோடி) நெல் தேவைப்படுகிறது. அந்த அளவிற்கு அரிசியை வைக்க இடமும் இல்லை, அரிசியும் இல்லை என அரசு அதிகாரிகள் சொன்னதைக் கேட்டு மன்னர் அதிர்ச்சி அடைந்தார். முப்பதாவது கட்டத்திலேயே 53 கோடியே 68 லட்சத்தி 70 ஆயிரத்து 912 நெல் தேவைப்படுகிறது.
64 கட்டங்களிலும் சேர்த்து மொத்தம் இந்த தானியங்களை 40 கிலோ மீட்டர் நீளம் 40 கிலோ மீட்டர் அகலம் 300 மீட்டர் உயரம் கொண்ட கட்டடத்திற்குள் தான் கொட்டி வைக்க முடியும். எடை என்று பார்த்தால் 4 கோடி 60 லட்சம் கோடி கிலோ தேடும் மன்னர் பவர் ஆப் காம்பௌண்டிங் பற்றி தெரியாமல் வாக்கு கொடுத்து மாட்டிக்கொண்டார்.
நம்மில் பலருக்கு வாழ்வில் கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற பெரும் கனவு இருக்கும், இதனை நனவாக்குவது என்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை, தொடர்ந்து முதலீடு செய்யும் பட்சத்தில் பவர் ஆஃப் காம்பவுண்டிங் மூலம் அதை எளிதில் நிறைவேற்றி விட முடியும்.