ஒரு நிறுவனம் ராமு, சோமு என்ற இரு பணியாளர்களை ஒரே நேரத்தில் வேலைக்கு எடுத்தது. புத்திசாலித்தனத்திலும், திறமையிலும் ராமுவும் சோமு ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை. ஆனால் இருவரும் வெவ்வேறு சூழ்நிலைகளை சேர்ந்தவர்கள். ராமு நாகரிகமானவன், தன்னம்பிக்கை மிகுந்தவர். நாட்டின் சிறந்த கல்வி நிறுவனத்தில் இருந்து பட்டம் பெற்றவர். சோமு அடக்கமானவர். ஆனால் உலக அறிவு கொண்டவர். சில வருட பணி அனுபவத்தை தவிர வேறு குறிப்பிடத்தக்க தகுதிகள் என்று ஏதும் இல்லாதவர் ராமு. ஆனாலும் இருவரில் சோமு எப்போதும் புத்திசாலித்தனம் மிகுந்தவராக கருதப்பட்டார். சிறந்த வாய்ப்புகள் பலவும் ராமுவுக்கு கிடைத்து வந்தது, இதனால் மனம் வருந்திய ராமு அந்த நிறுவனத் தலைவரை சந்தித்து "சோமுவை விட உயர்ந்த கல்வி தகுதி பெற்ற என்னை ஏன் புத்திசாலித்தனம் குறைந்தவராக கருதுகிறீர்கள்" என்று கேட்டார். இதற்கு நிறுவனத் தலைவர் அளித்த பதில் வாழ்க்கையின் உண்மையான பொருளை ராமுவுக்கு உணர்த்தியது.
கேள்விகள்
1. நிறுவனத்தின் தலைவர் கூறிய பதில் என்ன?
2. இந்தக் கதை உணர்த்தும் கருத்து என்ன?
விடைகள்
1. தலைவர் கூறினார், "புத்தகங்களை படிப்பதாலும் நல்ல சொற்பொழிவுகளை கேட்பதன் மூலமாகவும் சிறந்த கல்வியைப் பெறலாம். ஆனால் மெய்யறிவு என்பது உன்னையே நீ அறிவது".
2. புத்தகப் படிப்பு சொற்பொழிவுகளை கேட்டல் போன்றவற்றின் மூலம் பெரும் கல்வி அடிப்படையானது மேலோட்டமானது. இது வெறும் கடன் வாங்கிய சொத்து ஆனால் உன்னையே நீ அறிதல் என்பது "சுய சிந்தனை, கற்பனை காட்சிப்படுத்துதல், முடிவெடுத்தல்" போன்ற பல அம்சங்கள் நிறைந்தது. இவை உயிர்த்துடிப்பு மிக்கது, கற்பனை வளமும், காட்சிப்படுத்தும் திறனும் கொன்றவர் கொண்டவர்களால் தான். இந்த உலகில் பல்வேறு அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் சாத்தியமாகியுள்ளன. கற்பனை திறன் பொது அறிவை விடவும் வலிமை மிகுந்தது. சுய அறிவிலிருந்து மெய்யறிவு வெளிப்படுகிறது இருப்பினும் "உன்னையே நீ அறிதல்" என்பது எளிதான காரியம் அல்ல ஏனென்றால் ஒரு நாளின் ஒவ்வொரு நிமிடமும் உன் அனுபவ அறிவு என்னும் புத்தகம் புதிய பதிப்பை வழங்கிக் கொண்டே இருக்கிறது.