ஒரு புத்தகத்தை படிப்பதற்கு எந்த விதிமுறைகளும் இல்லை. எனவே, நீங்கள் விரும்புகின்ற எந்த முறையில் வேண்டுமானாலும் அல்லது எந்த வழியில் வேண்டுமானாலும் இதை நீங்கள் படிக்கலாம்.
உங்களுக்குப் பொருந்தாத பகுதிகளை நீங்கள தாராளமாக விட்டு விடலாம். ஒரு புத்தகத்தை முதல் பக்கத்தில் இருந்து கடைசிப் பக்கம் வரை வரி விடாமல் படிக்க வேண்டிய அவசியம் இல்லை.
நீங்கள் படிப்பதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்வதற்கு, தேவையான இடங்களில் அடிக்கோடிட்டுக் கொள்ளுங்கள். குறிப்புக்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒரு புத்தகத்திற்குள் ஆழமாக மூழ்குவதற்கு முன் அதை, மேலோட்டமாக ஒருமுறை வேகமாக படித்து விடுவது. நல்ல பயன் அளிக்கும் நீங்கள் எந்தப் பகுதிகளை படிக்காமல் விட்டுவிடலாம். எவற்றின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். என்பது பற்றிய ஒரு புரிதல் அப்போது உங்களுக்கு கிடைக்கும். நான் இப்படித்தான் படிக்கிறேன் சில சமயங்களில் எதையும், என்னால் விட்டு தள்ள முடியாது என்பதை நான் காண்கிறேன். வேறு சில சமயங்களில் ஒரு பாதிப்பு புத்தகத்தை நான் அப்படியே விட்டு விடுவேன்.
உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரே ஒரு யோசனை மட்டுமே உங்களுக்கு தேவை. ஒரு புத்தகம் உங்களுக்கு ஒரே ஒரு அறிவுரையை மட்டுமே கொடுக்கிறது, என்றால் அப்ப புத்தகத்தை படிப்பதற்கு நீங்கள் செலவிட்ட நேரம் உண்மையிலேயே மதிப்பு வாய்ந்த ஒரு முதலீடு தான்.
மகிழ்ச்சியாக தொடர்ந்து படியுங்கள்.
வேகத்தை விவேகமாக்கினால், வேண்டிய நேரம் மிச்சம்.
"வேகம், விவேகம் ஆகாது" என்று எச்சரிப்பார்கள். அது, ஓட்டுநர்களுக்கானது உங்களுக்கானது அல்ல.
நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் மாணவர் அல்லது மாணவியாக இருப்பீர்கள். நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் மிக்கவராக இருக்கலாம்.
பணியில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தை திறம்பட நடத்திச் செல்வதற்காகவே சுற்றறிக்கைகள், விதிமுறைகள் போன்றவற்றை அதிகம் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கக் கூடும்.
கதை, கட்டுரை எழுதும் எழுத்தாளர்களும் இருப்பீர்கள்.பொழுதுபோக்காகவும் நிறைய வாசிக்க விரும்புவீர்கள்.
குறைந்த கால அவகாசம் தான் அளிக்கப்பட்டிருக்கும். அதற்குள் நீங்கள் படித்து புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கும். இதில் உங்கள் தேவை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
200 பக்கங்களைக் கொண்ட ஒரு புத்தகத்தை படித்து முடிக்க வேண்டும். நந்தினிக்கு இதற்கு நான்கு நாட்கள் தேவைப்படும். விவேகன் இதை ஒரே நாளில் முடித்து விடுவார். பவித்ராவுக்கு ஐந்து மணி நேரம் போதும். சுசித்ரா 2 மணி நேரத்தில் வாசித்து விடுவார்.
நீங்கள் நேரத்தை மிச்சம் பிடிக்க நினைப்பவர். எனவே சுசித்ரா என்ன மாதிரியான வழிமுறைகளை பின்பற்றுகிறார் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? வேகமாக வாசிப்பது ஒரு கலை. பயிற்சி.
வெறுமனே பக்கங்களை புரட்டிக் கொண்டு போய் விட்டு படித்ததாக பேர் பண்ணிக் கொள்ள முடியுமா? படித்தது நினைவில் தங்க வேண்டாமா? என்று கேட்பீர்கள். நீங்கள் எவ்வளவு வேகமாக படிக்கிறீர்கள் அதைப் பற்றி கணக்கு பார்ப்பதில்லை. அப்படியானால் இப்போது கணக்கு பாருங்கள். அதை நாம் படிக்க வேண்டிய விஷயத்தை பொறுத்தது.
சரி, கவிதை உங்களுக்கு பிடித்திருக்கலாம் வேகமாய் படிப்பீர்கள். கணிதம், அறிவியல் புரியாமல் இருக்கலாம் மெதுவாகத்தான் முடியும் இருந்தாலும் எதை எவ்வளவு வேகமாக படிக்கிறீர்கள் என்பதை கணக்கிட முயற்சி செய்யலாம் இல்லையா.
செய்யலாம் எப்போது எப்படி படிக்கிறேன் என்பதை பார்க்க வேண்டும். வீட்டில் வசதியாக படுக்கையில் படுத்துக்கொண்டு படிக்கப் பிடிக்கும். நூலகத்திலோ, அலுவலகத்திலோ உட்கார்ந்து படித்தால் மெதுவாகத்தான் படிக்க முடியும். மொழி பிரச்சனை உண்டா, அது இல்லாமல் இருக்குமா தமிழ் என்றால் விரைவாக படிப்பேன். ஆங்கிலம் என்றால் கொஞ்சம் தாமதமாகும். இந்தி என்றால் ரொம்பவும் நேரம் ஆகும்.
பெரிய எழுத்துக்களில் அச்சிட்டிருக்க வேண்டுமா? அப்படி நினைக்கவில்லை. இது மாதிரியான ஒரு உரையாடலை உங்களுடன் நிகழ்ந்ததாக வைத்துக் கொள்வோம்.
நீங்கள் வேகமாக வாசிக்க வேண்டுமானால், நீங்கள் படிக்க வேண்டிய விஷயம் உங்களுக்கு பிடித்த விஷயமா இருக்க வேண்டும்.
இப்போது எவ்வளவு வேகத்தில் படிக்கிறீர்கள் என்பதை கணக்கிட வேண்டும் வசதிகளை அமைத்துக் கொண்டால் வேகத்தை கூட்டலாம், நல்ல வெளிச்சம், காற்றோட்டம் இப்படி.
கண்ணாடி தேவைப்பட்டால் அதை வாங்கிக் கொள்ள வேண்டும். பல மொழிகளில் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். எழுத்தின் அளவு உங்களுக்குப் பிரச்சனை இல்லை.
இவ்வளவு தானே.
உங்களுக்கே வேகமாக படிப்பது எப்படி? என்பதற்கான வழிமுறைகள் தெரிந்திருக்கின்றனவே, உங்களுக்கு விருப்பம் உள்ள புத்தகங்களை விரைவாக படித்து விடுவீர்கள். இப்போது நிமிடத்திற்கு 100 வார்த்தைகளை படிக்கப் போகிறீர்களா? நாளைக்கு படிக்கும் வார்த்தை 120 ஆக்குவதற்கு என்ன வழி என்று பாருங்கள்.
நின்று நடந்து படுத்து எப்படி இருந்தால் உங்கள் வாசிப்பு வேகம் கூடும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். காற்றாடியை ஓட விட்டுக் கொண்டே படிக்கலாம், வசதி இருந்தால் குளிர்சாதனத்தை தட்டி விட்டுக் கொள்ளலாம். இது சொகுசுக்காக செய்யப்படுவதில்லை என்பதை கவனியுங்கள். உங்களுக்கு வசதியாக அமைத்துக் கொண்டாள் உங்கள் செயல் திறன் அதிகரிக்கும்.
பார்வை குறைவு அச்சுறுத்துகிறதா, கண்ணாடி அணிந்தால் தீர்ந்தது. எந்த மொழி சிக்கலாய் இருக்கிறதோ அதில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்கள். ஆர்வம் இருக்குமானால் பொடி எழுத்தாக இருந்தாலும் பொருட்படுத்தாமல் படிப்பீர்கள் இதை எல்லாம் உங்களுக்கு தெரிந்த வழிகள் தானே.
அப்புறம் என்ன நீங்கள் நிறைய படிக்கலாம், அதிக விஷயங்களை தெரிந்து கொள்ளலாம் அவற்றை நினைவில் வைத்துக் கொள்ளலாம் பயன்படுத்தலாம் பயன் அடையலாம்.
#Tag
#How to read a book
#Books #eBooks #Reading