ரகசியங்களை காப்பாற்றுங்கள்
எந்த ஒரு குழு அல்லது நிறுவனத்திலும் ஒரு தலைவர் பொறுப்பான பதவியை வகிக்கின்றார் என்றால், அவர் பேச்சைப் பற்றியும் பயன்படுத்தும் வார்த்தைகளை பற்றியும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரே ஒரு தவறான வாக்கியம் அவர் நிறுவனத்தை அழித்து விட முடியும். ஒரு தலைவர் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம், எப்படி ரகசியங்களை காப்பாற்றுவது என்பதே.
"மக்களின் தலைவன், எத்தனை மனிதர்களுக்கு ஒரு ரகசியத்தை தெரிவிக்கிறாரோ, தன் செயலினால் ஆற்றாமை அடைந்து அத்தனை பேருக்கும் அடிமை ஆவார்".
ஒரு தலைவர் வெளிப்படையாக பேச கூடாத பல திட்டங்கள் மற்றும் விஷயங்கள் உள்ளன. சரியான தருணம் வரும் வரையில் அவர் இந்த ரகசியங்களை அம்பலப்படுத்தலாகாது.
ஒரு நிறுவனத்தில் செயல்படுத்தப்படும் ஒவ்வொரு திட்டமும் கருத்தாக்கம், முன்னேற்பாடு மற்றும் செயல்படுத்துதல் என மூன்று நிலைகளைக் கடந்து வர வேண்டும்.
ஒவ்வொரு நிலையிலும் தலைவர் மட்டுமே அறிந்து இருக்க வேண்டிய முக்கிய "ரகசியங்கள்" இருக்கின்றன மற்றவர்கள் இதை அறிய தலைவர் அனுமதிக்க கூடாது.
மற்றவர்களுக்கு ரகசியங்களை சொல்லி கொண்டு இருந்தால் என்னவாகும்? நடப்பதற்கு சாத்தியமாக கூடிய விளைவுகளை பார்ப்போம்.
தன் ரகசியங்கள் அறிந்த அனைவரிடமும் ஒரு தலைவன் தலைவணங்கிப் போக வேண்டும். மேலும் அதிகமான நபர்கள் அவரின் ரகசியங்களை அறிந்து இருந்தால், அவர் மேலும் அதிகமாக சிரம் தாழ்த்த வேண்டி இருக்கும் சூழ்நிலை ஏற்படும். எப்பொழுதும் சூழ்நிலைகளை தலைவர் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் மற்றவர்கள் அவரை கட்டுப்படுத்த அனுமதிக்க கூடாது.
சரியான விஷயத்தை தவறான மனிதரிடம் சொல்லி இருந்தால், அந்த ரகசியமானது கசிவதற்கு வாய்ப்புகள் மிகவும் அதிகம்.
அவ்வாறு கசியும் தகவல்களால் நிறுவனம் நட்டத்தையும், தலைவர் மன உளைச்சலையும் சந்திக்க நேரிடும்.
"பேசும் முன் இரு முறை யோசி" என்பது வியாபாரத்தின் பொன்னான விதி. ஒரு தையல்காரருக்கு கூட அவரின் பயிற்சியின் போது வழங்கப்படும் அறிவுரை என்னவென்றால், "இரண்டு முறை அழகு ஆனால் ஒரு முறை வெட்டு".
கௌடிலரின் எதிரிகள் அவரைக் கண்டு அஞ்சுவதற்கு காரணம் அவரின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்று எப்போதும் புரிந்து கொள்ள முடியவில்லை. எப்பொழுதும் பல திட்டங்களை வைத்திருந்தார் எதிரிகளை ஆச்சரியப்படுத்தும் வகையில் ஒரு திட்டம், தோல்வியுற்றால் மற்றொரு திட்டம் கொண்டு தாக்குவார்.
எப்பொழுதும் ரகசியமான பல திட்டங்களை வைத்திருக்க வேண்டும் அது மற்றவர்கள் அறியாத வண்ணம் பாதுகாத்திட வேண்டும்.
உன் ரகசியத்தை உன்னால் காப்பாற்ற முடியாமல் போனால், உலகில் வேறு எவராலும் உன் ரகசியத்தை காப்பாற்ற முடியாது.
ரகசியத்தை நீ காத்தால் ரகசியம் உனக்கு அடிமை இல்லையேன், நீ அதற்கு அடிமை.